RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

சிந்தனைச் சேவை - 35

11.08.22 05:25 PM By thanjavur

சிந்தனைச் சேவை - 35

கேள்வி: எனது தோழி அவளுக்கு நடந்துவிட்ட குற்றங்களையும், அவள் செய்துவிட்ட தப்புகளையும் தவறுகளையும் எண்ணி எண்ணிச் சாகிறாள். அவளுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லட்டும், சுவாமிஜி?

-திருமதி.பிரியதர்ஷினி, அமலாபுரம்.

தோழிக்கான பதில்:


வாழ்வதற்காக ஓடு!


இறைவன் நல்கிய வாழ்க்கை உன்னை விட்டுப் போய்க் கொண்டிருப்பதை நினைத்தால் நெஞ்சு நடுங்கும்.


வந்து விட்டுப் போன உணர்ச்சிகளில், பாவங்களில், பலவீனங்களில் தேங்காது தொடர் நடை போடு.


மனம் தேங்கினால் சாக்கடை; ஓடினால் ஆறு.


ஆறாக மாறிப் பிறருக்குப் பயன்படு; சாக்கடையாகிக் குப்பைகளைச் சுமக்காதே.


ஓடு, ஓடிக்கொண்டே இரு. 

உன் பிரச்னைகளே உன்னிடமிருந்து ஓடும் வரை ஓடிக்கொண்டே இரு.

சுவாமி விமூர்த்தானந்தர்

11 ஆகஸ்ட், 2022

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

thanjavur